25/7/09

மைசூர் மதக் கலவரம்-ராம்சேனா தலைவர் முத்தாலிக் கைது

மைசூரில் நடந்த மதக் கலவரத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வன்முறையைத் தூண்டியதாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் இன்று கைது செய்யப்பட்டார்.
மங்களூரில் ஒரு பப்க்குள் நுழைந்து பெண்களை ரோட்டில் ஓட ஓட விரட்டித் தாக்கிய அமைப்பு தான் ஸ்ரீராம் சேனா.
இந் நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் மைசூரில் இரு பிரினருக்கு இடையே மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதக் கலவரத்தை தூண்டியதே முத்தாலிக் தான் என்றும், பிரச்சனையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதால் தான் மதக் கலவரமே வெடித்தது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலை பெல்காம் நகரில் வைத்து அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
பப் தாக்குதலையடுத்த முத்தாலிக் மங்களூருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
source:Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.