
ஒரு சமயம் பைத்துல்லாஹ் மஹ்சூதை சந்திக்கச்சென்ற பி.பி.சி நிருபருக்கு மஹ்சூத் ஆப்கானிஸ்தானில் யுத்தகளத்திலிருப்பதாக பைத்துல்லாஹ் மஹ்சூதின் படைவீரரான சுல்பிக்காரிடமிருந்து பதில் கிடைத்தது. 9/11 க்கு பிறகு தான் படோடாபத்தையோ, புகழையோ எதிர்பார்க்காத மஹ்சூத் சிறந்த கமாண்டராக வளர்ந்து வந்தார்.வசீரிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் செய்தது.20 ஆயிரம் போராளிகள் மஹ்சூதின் அணியில் உள்ளனர்.35 வயதான மஹ்சூதின் தலைக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் விலைப்பேசப்பட்டுள்ளது.மஹ்சூதை குறித்து தகவல் தருபவருக்கு பெருந்தொகை சன்மானமாக அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசும் அறிவித்திருந்தது.
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கும்,முன்னா
மஹ்சூதும் அவருடைய மனைவியும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெஹ்ரீகே தலிபானின் முதிர்ந்த தலைவர்களில் ஒருவரான ஹக்கீமுல்லா மஹ்சூத் இரண்டு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் காயமடைந்த மஹ்சூத் பின்னர் இறந்தாக அவ்வமைப்பு கூறியுள்ளது. மஹ்சூதின் பாதி உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. மஹ்சூதின் உறவினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மஹ்சூதின் நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்கா கண்காணித்து வந்தது.பலமுறை தாக்குதலிருந்து அவர் மயிரிழையில் தப்பியதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.தெற்கு வசீரிஸ்தானில் மதரஸா கல்வியை முடித்து விட்டு மஹ்சூத் 1990 களில் ஆப்கானிஸ்தானிற்கு அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக போராட சென்றார்.அதும் முடிந்து பாகிஸ்தானிற்கு திரும்பிய பிறகுதான் தெஹ்ரீக் தலிபான் என்ற அமைப்பை உருவாக்கினார். பாகிஸ்தான் அரசு மஹ்சூதுடன் செய்த ஒப்பந்தங்கள் தான் அவரை தெற்கு வசீரிஸ்தான்,பஜவூர்,டான்க்,தேரா இஸ்மாயீல்கான் ஆகிய பகுதிகளில் பிரபலப்படுத்தியது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது.மஹ்சுத் கொல்லப்பட்டது உண்மையானால் அவருடைய பதவிக்கு ஹக்கீமுல்லாஹ் மஹ்சூத்,மவ்லானா அஸ்மத்துல்லாஹ்,வலியுற்றஹ்மான் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார் என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,gulfnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.