31/5/09

சென்னை தாசாமக்கானில் "பள்ளி செல்வோம் " பிரச்சாரம் - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தியது

0 கருத்துகள்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மே மாதத்தில் "பள்ளி செல்வோம்" பிரசாரத்தை பல மாநிலங்களில் நடத்தி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் கல்வி விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்டின் கேரளா ,தமிழ்நாடு ,கோவா,ஆந்திரா ,ராஜஸ்தான் ,மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரின் மாநில கமிட்டிகள் செயல்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் இலவசப் பாடப்புத்தகம் ,இலவச சீருடை மற்றும் ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை ஏற்று,தொடர்ந்து அவர்கள் படிக்க வழிவகை செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை தாசம்கான் பகுதியில் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்துடன் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் 30.05.2009 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சுமார் 100 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைப்பெற்ற குழந்தைகள் கலந்து கொண்ட பிரச்சார ஊர்வலத்தை சகோதரர். முகம்மது ஆசம் அவர்கள் துவக்கி வைத்தார் . பின்னர் பிரச்சாரம் பகல் 12 மணிக்கு இனிதே நிறைவுற்றது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.