19/5/09

சேதுத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும்: கருணாநிதி உறுதி

0 கருத்துகள்

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும்" என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"சேது சமுத்திரத் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிப்பதிலும், சட்டரீதியாக அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுகள் அக்கறை கொண்டுள்ளது. எனவே, அந்தத் திட்டம் வருங்காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. அதை ரத்து செய்து விட்டதாக யார் சொன்னாலும், அதை நிறைவேற்ற விட மாட்டோம் என யார் தடுத்தாலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்பதை முழு நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் கருணாநிதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.