3/6/09

மணிப்பூரில் 5 மாணவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!

0 கருத்துகள்

மணிப்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் இசாமுத்தீனை அன்மையில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாதவர்கள் கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஐந்து மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தெளடம் ஷ்யாம், லான்கிஷோர், கிரண், தோய்தோய் மற்றும் பிஜாம் தினேஷ் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு நேற்று இம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். இவர்கள் மணிப்பூர் ஜனநாயக மாணவர்கள் கூட்டமைப்பு (DESAM) மற்றும் மணிப்பூர் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்(AMSU)பைச் சார்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
மணிப்பூர் பல்கலைக் கழக டீனாகப் பணியாற்றிய இசாமுத்தீன் கடந்த மாதம் 25ஆம் தேதி கொலை செய்யப் பட்டதை அடுத்து முதலில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.