27/7/09

இஸ்தான்புல்:சீனாவைக்கண்டித்து உய்கூர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

0 கருத்துகள்
கடந்த ஜுலை 5ஆம்தேதி சீனாவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட கிழக்கு துருக்கிஸ்தானில் பூர்வீக குடிமக்களான உய்கூர் முஸ்லிம்கள் மீது சீனா பாதுகாப்புப்படையினரும் ஹான் இனத்தைச் சார்ந்தவர்களும் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனைக்கண்டித்து துருக்கியில் வாழும் உய்கூர் முஸ்லிம்கள் சார்பில் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகம் முன் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீற முயன்றதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது சீனக்கொடி எரிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.