20/8/09

அமெரிக்காவில் நோன்பை முன்னிட்டு பேரித்தம்பழ விற்ப்பனை சூடு பிடித்துள்ளது

0 கருத்துகள்
அமெரிக்கா கிழக்கு கலிபோர்னியாவில் முஸ்லிம்களின் நோன்பை முன்னிட்டு பேரித்தம் பழ விற்பனை கடந்த சில வாரங்களாக சூடு பிடித்துள்ளது.
டென்னிஸ் ஜென்சென் (கலிபோர்னியாவின் பிரசித்தி பெற்ற பேரித்தம் பழ தோட்ட உரிமையாளர் லாஸ் எஞ்செல்ஸ் நாளிதழுக்கு நேற்று செவ்வாய் கிழமை அளித்த பேட்டியில் கூறுகையில்கொஞ்சம் பேரித்தம் பழம் அனுப்புங்கள்” ”என்னை காப்பாற்றுங்கள்அவரிடம் ஒரு பேரித்தம் பழம் கூட இல்லாமல் விற்று விட்டதாம். இதே நிலைதான் அங்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களின் நிலையாம்.

ரமளானிற்கு முன் கோச்செல்லா பள்ளத்தாக்கில் உள்ள மொத்த விற்பனையில் 20,687 டண் 32 பில்லியன் டாலர் விற்பனையானது. ரமளான் மாதத்தில் மாத்திரம் 480,000 டண் சாகுபடி ஆகி உள்ளது.மற்ற நாட்களை விட 70% அதிகமாக விற்பனையாகி உள்ளதாகவும் பயிர் சாகுபடி அறிக்கை தெரிவிக்கிறது.

கலிபோர்னியா பாம் ஸ்பிரிங்ல் குடியிருப்பு உரிமையாளர் அப்துல் முஹம்மத் கூறுகையில் ரமளான் மாதத்தில் மெக்சிகொவில் வாழும் கிறிஸ்த்தவர்கள் எவ்வாறு கிறிஸ்துமஸ் சமயத்தில் தாமல்ஸ் என்ற ஒரு வித பழகாரம் உண்பார்களோ அதே போன்று ரமளான் மாதம் முழுவதும் அதாவது 30 நாட்கள் பகல் ஆரம்பிப்பதற்கு சற்று முன் முதல் துவங்கி இரவு ஆரம்பிப்பதற்கு சற்று முன் வரை உண்ணாமலும் பருகாமலும் இறைவனின் (படைத்தவனின்) நெருக்கத்தை அடைவார்கள். பேரித்தம் பழம் இந்த ரமளான் நோன்பை பிறியும் வேளையில் உண்பது முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்று வாழும் உலக முஸ்லிம்களின் பாரம்பரியம்.

அமெரிக்காவின் தற்போதைய செய்தியில் அமெரிக்காவில் 7 மில்லியனுக்கு மேல் முஸ்லீம்கள் வெவ்வெறு சமூகத்தில் இணைந்து வழ்வதாக தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.