வாஷிங்டன்: செப்டம்பர் 11 தாக்குதலை பற்றி சுதந்திரமான கமிஷன் புலனாய்வு விசாரணை அறிக்கைக்கோரி 80 ஆயிரம் நியூயார்க் மக்கள் கையெழுத்திட்ட மனு Newyork coalition accountability now என்ற அமைப்பின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
28 ஆயிரம் பேர் ஒப்பிட்ட மனு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 24 ஆம்தேதி ஏற்கனவே 52 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. கையெழுத்துகள் சரியா என்பதை பரிசோதிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் கடந்த வாரத்திலிருந்து பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார். இந்த மாதம் 18 ஆம் தேதிக்கும் பரிசோதனைகளை முடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மனுவில் கையெழுத்திட்டவர்களின் கையெழுத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் புதிய விசாரணை அறிக்கைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.