18/10/09

கோவாவில் குண்டுவெடிப்பு ஹிந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு

0 கருத்துகள்
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மர்கோவா என்ற நகரில் நேற்று இரவு இரு சக்கரவாகனத்தில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். படுகாயங்களுடன் ஒருவர் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலியான பாடீல் என்ற நபர் மாலேகான் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிராக்யா சிங்கின் அபினவ்பாரத் என்ற ஹிந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் இது பற்றி கூறுகையில்,குண்டுவெடிப்பிற்கு சனாதன் ஷவுன்ஸ்தா என்ற அமைப்புக்கு தொடர்பிருப்பதாகவும் போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நடந்த இடம் கிரேஸ் என்ற கிறிஸ்தவதேவாலயத்திற்கு அருகில் எனவே ஏதேனும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என்பதால் போலீசார் இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
source:twocircles

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.