21/10/09

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

1 கருத்துகள்
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார்.52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்.
source:thatstamil

1 கருத்துகள்:

  • 22 அக்டோபர், 2009 அன்று AM 10:17
    THAMEEM :

    இஸ்ரோவில் இஸ்ரேலியானால் தேசதுரோகம் நடந்துள்ளது இதற்க்கு முதலில் விசாரணை கமிசன் தேவை.

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.