19/10/09

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட அறிமுக விழா

2 கருத்துகள்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அறிமுக விழா டெல்லியிலும்,பல்வேறு மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 18ம் தேதி நடைபெற்றது.

அதன்படி சென்னையில் சரியாக மாலை 4மணியளவில் மாபெரும் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் வரை சென்றது.
பேரணிக்கு மாவட்டத் தலைவர் திரு.p.முகம்மது ஹூசைன் தலைமையேற்று துவக்கிவைத்தார். மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு.ஏ.அஹமது பாஷா முன்னிலை வகித்தார். SDPI பிரதிநிதி திரு.இ.முஹம்மது ரஷீது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மாலை 4மணிக்கு மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி.S.அமீர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு.M.ஹஸன் அப்துல் வாரிப் அவர்களும், SDPI பிரதிநிதிகள் திரு.M.முகம்மது அன்ஸாரி, திரு.S.M.சவுந்தராஜன், திரு.S.அப்துல் அஜீஸ், திரு.K.வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.M.முகம்மது புஹாரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் திரு.V.பாலு அவர்கள், சமூகசேவகர் K.M.ஷாஹூல் ஹமீது அவர்கள், சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபர் டாக்டர்.திரு.R.K.முஹைதீன் ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.J.முஹம்மது நாஜிம் அவர்களும், மாவட்ட தலைவர் திரு.முஹம்மது ஹூசைன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.A.அமீர் சுல்தான் அவர்கள் நன்றியுரையாற்றினார். பேரணியிலும்,பொதுகூட்டத்திலும் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டம் சுமார் 10மணியளவில் முடிவுற்றது.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.