7/7/09

மர்வாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கடந்த புதன்கிழமை ஜெர்மனியில் வைத்து வெறிப்பிடித்த இளைஞன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்திற்குள் கத்தியால் குத்தப்பட்டு மரணித்த‌ மர்வா அல் ஸெர்பினியின் உடல் அவரது சொந்த நாடான எகிப்திற்கு கொண்டுவரப்பட்டு அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்செய்யப்பட்டது.


அவரது ஜனாஸா ஊர்வலத்தில் திரளாக மக்கள் கலந்துக்கொண்டனர்.(இதுபற்றிய செய்தி பாலைவனத்தூதில் ஏற்கனவே வெளியாகியிருந்தது)ம‌ர்வாவின் ம‌ர‌ண‌ம் எகிப்தில் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. எகிப்தைச்சார்ந்த பொதும‌க்க‌ளும், பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் இப்பிர‌ச்ச‌னையை எகிப்திய‌ அர‌சு சாதார‌ண‌ விச‌ய‌மாக‌ க‌ருதிவிட‌க்கூடாது என்று அர‌சுக்கு கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

எகிப்து அலெக்சான்டிரியாவில் உள்ள‌ அவ‌ருடைய‌ சொந்த‌ ஊரில் ஒரு தெருவிற்கு ம‌ர்வாவின் பெய‌ர் சூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.ம‌ர்வாவை அவ்வூர் ம‌க்க‌ள் "ஷ‌ஹீத‌த் ஹிஜாப்" ஹிஜாபிற்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌வ‌ர் என‌க்குறிப்பிடுகின்றன‌ர்.
news source: al jazeera