28/7/09

தேசிய அளவிலான பெண்கள் அமைப்பு உருவாக்கம்

0 கருத்துகள்
பெண்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக்கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவந்த பெண்களுக்கான அமைப்புகளின் பிரநிதிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் பெண்களுக்கான நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பை துவக்கியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த அமைப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு ஜம்மியத்துல் நிஸா, கர்நாடகா விமன்ஸ் ஃபாரம், கேரளா விமன்ஸ் ஃப்ரண்ட் ஆகிய அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், அவர்களை எல்லாத்துறைகளிலும் முன்னேற்றுதல், சமூகப்பிரச்சனைகளைக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
நிர்வாகிகளாக எ.எஸ்.ஸைனபா(கேரளா) தலைவராகவும், எம்.பேனசீர்(தமிழ்நாடு)உபத்தலைவராகவும், ஷாஹிதா தஸ்னீம்(கர்நாடகா)பொதுச்செயலாளராகவும், ஜமீலா பஷீர்(கேரளா) செயலாளராகவும், கெ.ஃபாமிதா(தமிழ்நாடு) பொருளாளராகவும் தேர்வுச்செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ.எம்.அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப், முன்னால் சேர்மன் இ.அபூபக்கர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.