இதன் மூலம் மட்டும் தங்கள் கணவர்களின் விடுதலை சாத்தியம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
2006 செப்டெம்பர் 8 ல் முஸ்லிம்களின் ஸபெய்பராஅத் அன்று மாலேகானின் கப்ருஸ்தான் மற்றும் முஷவரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 31 பேர் இறந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் காரணமாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு காவல்துறை ( ATS ) 11 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. இவர்கள் நிரபராதிகள் என்று கூறி தன்சீன் என்ற முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு 300 பக்க அறிக்கையை CBI வசம் ஒப்படைத்தது. அவர்கள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து , குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் மனைவிகள் ஜூன் 2009 இல் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து CBI உடனடியாக அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வலியுர்த்தினர். அதை ஏற்று கொண்ட சிதம்பரம் ஒரு வாரத்தில் CBI அறிக்கையை தாக்கல் செய்யும் என்று வாக்குறுதி அளித்தார் . ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த குண்டு வெடிப்பின் உண்மை குற்றவளிகளான இந்துத்துவ தீவிரவாதிகள் பெண் சாமியார் பிரக்யா சிங்க் , கலோனல் பிரசாத் ப்ரொஹித் மற்றும் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை சேர்ந்தவர்களை மகாராஷ்டிர ATS ன் தலைவர் ஹெய்மந்த் கர்கரே கண்டுபிடித்தார். ஆனால் அவர்களை நீதிமன்றம் கடந்த வாரம் MCOCA சட்டத்திலிருந்து விடுவித்தது . ஆனால் நிரபராதிகளன முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 3 வருடங்களாக சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது MCOCA சட்டம் நீக்கப்பட்டு விட்டது , ஆனால் நிரபராதிகள் மீது இன்னும் நீக்கப்படவில்லை என்பதால் அவர்களுடைய மனைவிகள் பிரதமருக்கும் , ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும், உள்துறை மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
source: Twocircles
2006 செப்டெம்பர் 8 ல் முஸ்லிம்களின் ஸபெய்பராஅத் அன்று மாலேகானின் கப்ருஸ்தான் மற்றும் முஷவரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 31 பேர் இறந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் காரணமாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு காவல்துறை ( ATS ) 11 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. இவர்கள் நிரபராதிகள் என்று கூறி தன்சீன் என்ற முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு 300 பக்க அறிக்கையை CBI வசம் ஒப்படைத்தது. அவர்கள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து , குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் மனைவிகள் ஜூன் 2009 இல் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து CBI உடனடியாக அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வலியுர்த்தினர். அதை ஏற்று கொண்ட சிதம்பரம் ஒரு வாரத்தில் CBI அறிக்கையை தாக்கல் செய்யும் என்று வாக்குறுதி அளித்தார் . ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த குண்டு வெடிப்பின் உண்மை குற்றவளிகளான இந்துத்துவ தீவிரவாதிகள் பெண் சாமியார் பிரக்யா சிங்க் , கலோனல் பிரசாத் ப்ரொஹித் மற்றும் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை சேர்ந்தவர்களை மகாராஷ்டிர ATS ன் தலைவர் ஹெய்மந்த் கர்கரே கண்டுபிடித்தார். ஆனால் அவர்களை நீதிமன்றம் கடந்த வாரம் MCOCA சட்டத்திலிருந்து விடுவித்தது . ஆனால் நிரபராதிகளன முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 3 வருடங்களாக சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது MCOCA சட்டம் நீக்கப்பட்டு விட்டது , ஆனால் நிரபராதிகள் மீது இன்னும் நீக்கப்படவில்லை என்பதால் அவர்களுடைய மனைவிகள் பிரதமருக்கும் , ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும், உள்துறை மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
source: Twocircles
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.