24/8/09

இஸ்ரேலிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

0 கருத்துகள்
டெல் அவீவ்:இஸ்ரேலிலிருந்து ஏவுகணைகள் வாங்க ரூ.100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 2012 ஆம் ஆண்டில் 18 ஸ்பைடர் ஏவுகணைகளை இஸ்ரேல் இந்தியாவுக்கு அளிக்கும். இஸ்ரேலிலுள்ள ஆயுத நிறுவனமான ராஃபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியாவுக்கு ஏவுகணைகளை தயாரித்து அளிக்கும் என்று ஜெருசலம் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2008 இலிருந்து ரஷ்யாவை முந்தி இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனைச்செய்யும் நாடாக மாறியுள்ளது. ஆயுத ஒப்பந்தங்களின்போது இஸ்ரேல் நிறுவனங்களான ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ராஃபேல் ஆகியன இந்திய அதிகாரிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.