24/8/09

ஈராக்கில் மீண்டும் அமெரிக்க ராணுவத்தின் சிவிலியன் வேட்டை

0 கருத்துகள்

பாக்தாத்:ஈராக்கின் கிழக்கு மாகாணமான தியாலாவில் முல்லா ஹபேஷ் கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் அக்கிரமான முறையில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர் அந்த வீட்டின் உரிமையாளரை சுட்டுக்கொலைச்செய்தனர்.

அவருடைய மகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.தெற்கு ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் 3 சிறுவர்களை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி நடைபெற்று ஒரு வாரத்திற்குள் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

அல் தர்மியா கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 12 வயதிற்கும் குறைவான 3 சிறுவர்களை ஆக்கிரமிப்பு ராணுவம் சுட்டுக்கொன்றது.இரண்டு நிகழ்வுகளை பற்றியும் அமெரிக்க ராணுவம் எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.

செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.