3/8/09

கிழக்கு ஃபலஸ்தீனில் 9 ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை இஸ்ரேல் பலவந்தமாக வெளியேற்றியது

0 கருத்துகள்

டெல்அவீவ்:கிழக்கு ஜெருசலமில் 9 ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை இஸ்ரேல் பலம் உபயோகித்து வெளியேற்றியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக இரண்டு வீடுகளிலுமாக தங்கியிருந்த ஃபலஸ்தீன் குடும்பத்தினரை இஸ்ரேல் போலீஸ் நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இவர்களை வெளியேற்றியபின்னர் யூத குடும்பங்கள் அவ்வீடுகளை ஆக்கிரமித்துள்ளனர். ஷைக் அல் ஜரா என்ற மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பிரதேசம் யூதர்களுக்கு சொந்தமானது என்று இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்நிகழ்வு நடந்தேறியுள்ளது. இப்பகுதியில் 20 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இச்செயலை ஐ.நாவும் பிரிட்டனும் கண்டித்துள்ளன.
1967 ஆம் ஆண்டில்தான் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் அபகரித்தது. தொடர்ந்து மண்ணின் பூர்வீக குடிமக்களான ஃபலஸ்தீனிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் பலவந்தமாக வெளியேற்றியுள்ளது இஸ்ரேல்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.