1/8/09

ஈராக்கிலிருந்து ஆஸி. துருப்புகள் முற்றிலும் வாபஸ்

0 கருத்துகள்
ஈராக்கிலிருந்து ஆஸ்ட்ரேலியா படைகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டில் புகுந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவியாக ஆஸ்ட்ரேலியப் படையைச் சேர்ந்த 2,000 வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில்,படை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஈராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆஸ்ட்ரேலியப் படைகள் கடந்த ஆண்டிலிருந்து வாபஸ் ஆகத் தொடங்கின.
இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனைத்து ஆஸ்ட்ரேலிய வீரர்களும் ஈராக்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடைசியாக எஞ்சியிருந்த 12 ஆஸ்ட்ரேலிய வீரர்களும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பாக்தாத்திலிருந்து ஆஸ்ட்ரேலிய விமானப்படை விமானம் மூலமாக புறப்பட்டு ஆஸ்ட்ரேலியா வந்து சேர்ந்ததாக ஆஸ்ட்ரேலிய இராணுவ தளபதி ஜெனரல் மார்க் கெல்லி இன்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.