3/8/09

ஷிஹாப் தங்கள் மரணம்:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம்

0 கருத்துகள்

துபை:கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு செய்யத் ஷிஹாப் தங்களின் மரணத்திற்கு வெளிநாட்டுவாழ் இந்தியர் நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

மத,சமூக,கல்வி துறைகளில் ஷிஹாப் தங்களின் பங்களிப்பு மறக்க இயலாதது என அனுதாப கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் உமர் ஃபாரூக்,இ.எம்.ஃபிரோஸ்,மொய்து மவ்லவி,ஸஅதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினர்.

எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அஜ்மான் கிளை சார்பாக ஏற்பாடுச்செய்த அனுதாப கூட்டத்தில் "முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்ட ஷிஹாப் தங்களின் மரணம் முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டது. இக்கூட்டத்தில் பஷீர்,லத்தீஃப்,ஷாஃபி, நவாஸ்கான், துஃபைல் ஆகியோர் உரையாற்றினர்.

செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.