1/8/09

ஆப்கானிஸ்தானில் சிவிலியன் மரணம் அதிகரிப்பு:ஐ.நா அறிக்கை

0 கருத்துகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடத்தைக்காட்டிலும் இந்த வருடம் சாதாரண மக்கள் கொல்லப்படுவது 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் முதல் 6 மாதங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு பாகமும் வெளிநாட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
தலிபானுக்கெதிரான தாக்குதலில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதையடுத்து எழுந்த எதிர்ப்பினைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. போராளிகள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அரசு அலுவலகங்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மே மாதம் மட்டும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 261 பேர் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.