29/8/09

மனதிலுள்ள அழுக்குகளை சுத்தம்செய்து இறைநெருக்கத்தை பெறுங்கள்:அப்துற்றஹ்மான் பாகவி

0 கருத்துகள்
கத்தார்: மனதிலுள்ள அழுக்குகளை சுத்தம்செய்து இறைநெருக்கத்தை பெற முயற்சி செய்யவேண்டும் என்று பிரபல மார்க்க அறிஞரும் கேரள மாநிலம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் முதல்வருமான அப்துற்றஹ்மான் பாகவி உரை நிகழ்த்தினார்.
ரமலானில் கத்தார் நாட்டிலிலுள்ள கஸ்ட்(Guest centre) ஏற்பாடுச்செய்த நஸாயிமுல் ஃஹைர் என்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார் அவர்.
இந்நிகழ்ச்சியுடன் இணைந்து இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மாலை 4 மணியளவில் சிறுவர்-சிறுமிகளுக்கான வினாடி வினா போட்டியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் அழைப்பை ஏற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்திய மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். சுபைர் கவ்ஸரி அவர்கள் உருது உரையை நிகழ்த்தினார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.