29/8/09

புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசு

0 கருத்துகள்
ஷார்ஜா:புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசுத்தொகையாக வழங்கப்படுமென ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த புனித ரமலான் மாதத்தில் புகைப்பிடித்தலை கைவிட்டு புதிய வாழ்க்கையைத்தொடங்குவதாக நூற்றுக்கணக்கானோர் தங்களது பெயர்களை பதிவுச்செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் புகைப்பழக்கத்தை கைவிடுவதை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தது.2008 ஆண்டு முதல் புகைபிடிப்பதற்கு தடை அமுலில் வந்தது. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பவர்கள் மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்கவேண்டும். ரமலானில் 30 தினங்களிலும் புகை பிடிக்காதவர்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் மூலம் தேர்வுச்செய்யப்படுபவருக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் திர்ஹம் பரிசாக வழங்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.