18/9/09

கசாப்பு வியாபாரிக்கு கம்பளம் விரிக்கும் ஒமான்

0 கருத்துகள்
இந்த வருட இறுதியில் மோடி தலைமையிலான பிரநிதிக்குழுவொன்று ஓமான் நாட்டின் உதவியுடன் குஜராத்தில் துறைமுகம் ஒன்றை விரிவுப்படுத்துவது சம்பந்தமாக ஓமானுக்கு வருகைதரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சம்பந்தமாக பேட்டியளித்த குஜராத் முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரி, "குஜராத்திற்கு 9 அங்க பிரநிதிகளுடன் வருகைபுரிந்த ஓமான் வணிகத்துறை அமைச்சர் மக்பூல் அலி சுல்தான் வியாபாரம் மற்றும் துறைமுகம் கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்." மேலும் அவர் தெரிவிக்கையில் மோடி ஓமானிற்கு வருகைதரும்போது சோஹார் துறைமுகம் மற்றும் சுதந்திர வியாபார மண்டலத்திற்கு(Trade Free Zone) செல்வார் என்று கூறினார்.ஏற்கனவே ஜனவரி மாதம் நடைபெற்ற விபரண்ட் குஜராத் இன்வெஸ்டர்ஸ் மாநாட்டில் வைத்து ஓமான் உதவியுடன் குஜராத் துறைமுகத்தை வளப்படுத்துவது சம்பந்தமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கூட்டுக்கசாப்பு செய்த மரணவியாபாரி மோடிக்கு ஒரு முஸ்லிம் நாடு கம்பளம் விரித்து வரவேற்பளிப்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.