18/9/09

ஹிஜாப் அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்:நெதர்லாந்து எம்.பி

0 கருத்துகள்
ஆம்ஸ்டர்டாம்:இஸ்லாமிய ஆடை ஒழுக்கங்களிலுட்பட்ட ஹிஜாபை அணியும் முஸ்லிம் பெண்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று நெதர்லாந்து எம்.பி கீர்ட் வில்டேர்ஸ் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 1000 டாலர் வீதம் அபராதம் விதிக்கவேண்டும் என்பது வில்டேர்ஸ் ஆலோசனை கூறுகிறார். வலதுசாரி ஃப்ரீடம் பார்டியின் பி.டபிள்யூ தலைவரான வில்டேர்ஸ் அரசின் பட்ஜெட் சம்பந்தமான விவாதத்தின்போதுதான் இக்கருத்தை தெரிவித்தார்.
யாரெல்லாம் ஹிஜாபை அணிய விரும்புகின்றார்களோ அவர்கள் முதலில் உரிமத்திற்கு(லைசன்ஸ்) விண்ணப்பிக்கவேண்டும். ஹிஜாபை அணிபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் என்பது இஸ்லாமிய ஹிஜாபைபற்றிய பொதுமக்கள் கொண்டுள்ள கருத்திலிருந்து அவர்களை மாற்றுவதாகும் என்று வில்டேர்ஸ் கூறினார்.
நபி(ஸல்…)அவர்களை அவமரியாதைச்செய்யும் நோக்கத்தோடு ஃபித்னா என்ற டாக்குமெண்டரியை தயாரித்ததன் மூலம் இஸ்லாத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியவர் வில்லேர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.