10/9/09

0 கருத்துகள்

அஹ்மதாபாத்: கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் உட்பட நான்குபேரை சுட்டுக்கொன்றது போலி என்கவுண்டர்மூலம்தான் என்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிபதி தமாங் அளித்த விசாரணை அறிக்கைக்கு குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது.

நீதிபதியின் அறிக்கையை பரிசோதித்து சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிவிசாரணை அறிக்கையை தடைச்செய்யவேண்டும் என்று குஜராத் மாநில அரசு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது.நீதிபதி கல்பேஷ் ஜவ்ஹரிதான் இத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த மாதம் 30 ஆம்தேதி அடுத்த விசாரணை நடைபெறும்.

செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.