14/9/09

கர்நாடகா:முழுஅடைப்பின் பெயரால் கொள்ளை,தீவைப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம சேனா

0 கருத்துகள்
கர்நாடகா மாநிலத்திலிலுள்ள மிராஜ் என்ற இடத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்காக பெல்காமில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம சேனாவினர் முஸ்லிம்கடைகளில் கொள்ளை அடித்ததோடு 4 கடைகளை தீவைத்து கொழுத்தியுள்ளனர்.
மேலும் அரசு பஸ்களை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீராம சேனாவினர் முழு அடைப்பின் பெயரால் நடத்திய வன்முறையை கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டித்துள்ளார். சம்பவ இகர்நாடகா மாநிலத்திலிலுள்ள மிராஜ் என்ற இடத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்காக பெல்காமில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம சேனாவினர் முஸ்லிம்கடைகளில் கொள்ளை அடித்ததோடு 4 கடைகளை தீவைத்து கொழுத்தியுள்ளனர்.மேலும் அரசு பஸ்களை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீராம சேனாவினர் முழு அடைப்பின் பெயரால் நடத்திய வன்முறையை கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த அவர் ஸ்ரீராம சேனா நடத்திய தேவையற்ற இந்த பந்திற்கு அனுமதியளித்த கர்நாடக மாநில பாரதீய ஜனதா அரசு நடைபெற்ற இந்த வன்முறைக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும், இதுபற்றிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இத்தகைய நிகழ்வுகள் மக்கள் மத்தியில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பய உணர்வை ஏற்படுத்துவதற்கான அறிகுறி என்றும்அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.