13/10/09

குஜராத்: மோடி அரசு மீண்டும் அட்டூழியம். கபர்ஸ்தான்களை அழித்து சாலை அமைத்தது

0 கருத்துகள்
முஸ்லிம்களை சித்திரவதை செய்தவர்கள், முஸ்லிம் பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்தவர்கள்,முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், முஸ்லிம்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றியவர்கள் என ஒட்டு மொத்த சட்ட விரோத செயல்பாட்டிற்கும் முன்னோடிகள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொல்லும் குஜராத் அரசை நாம் எளிதில் மறக்க மாட்டோம்.
இது ஏதோ ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? இப்போதும் முஸ்லிம் இளைஞர்கள் எண்கொளண்டர் என்ற பெயரில் குறி வைத்து கொல்லப்படுகிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஆம் இப்படி குஜராத்தில் மக்கள் வாழ வழி இல்லை என்ற நிலை மாறி முஸ்லிம்கள் அடக்கஸ்தலங்களையும் கை வைத்து விட்டது இந்த பாசிச குஜராத் அரசு.
கபர்ஸ்தானின் பழைய தோற்றமும் அவ்விடத்தை அழித்து அமைக்கப்பட்ட சாலையும்.
(குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் வெளியே தெரியும் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்.)
தஹோத் மாநகரில் கோத்ரா ரோட்டில் மத்திய வக்பு வாரியத்துக்கு சொந்தமான கபர்ஸ்தான் உள்ளது. அதனை சுற்றி முஸ்லிம்களும் இன்ன பிற சமுதாய மக்களும் வசித்துவருகிறார்கள். கபர்ஸ்தான் மற்றும் குடியிருப்புகளை குஜராத் அரசு சட்ட விரோதமாக புல்டோசரை கொண்டு இடித்து தகர்த்தது. இம்மக்கள் வீடிண்றி வாழும் நிலையை உருவாக்கியது. மேலும் கபர்ஸ்தான் பகுதியை இடித்து அதன் மீது சாலையை அமைத்தது.
நகர முஸ்லிம்கள் இந்த சம்பவம் குறித்து சிறுபாண்மை அமைச்சரகம், சிறுபான்மை துறை அமைச்சர் சல்மான் குர்சித்,தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபாண்மை ஆணையம்,மாநில மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில வக்பு வாரியங்கள் ஆகிய ஆனையத்தில் எழுத்து பூர்வமாக முறையிட்டனர். மேலும் கொந்தளிப்பை உண்டாக்கும் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தும் படியும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
source:twocircles

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.