28/6/09

நதாவைக் கொன்றது பி.பி.சி?

டெஹ்ரான்:ஈரானில் அரசுக்கெதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் இரத்த சாட்சியாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும் நத ஆகா சுல்தானின் மரணம் பி.பி.சி திட்டமிட்டு நடத்திய கொலை என்று அதிர்ச்சி தகவலை ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இது சம்பந்தமாக செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட பி.பி.சி நிரூபர் ஜோன் லெய்ன் வாடகைக்கு ஏற்பாடுச்செய்த கொலையாளிதான் நதாவை கொன்றதாக ஃபார்ஸ் தெரிவிக்கிறது.
ஜோன் லெய்ன் தயாரித்துவரும் ஈரானுக்கெதிரான டாக்குமென்ட்ரிக்காக(குறும்படம்)இந்த கொலையை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.நதாவின் மரணத்தின் வீடியோ காட்சிகள் மிக வேகமாக இணையதளம் வழியாகவும், செய்தி சானல்கள் வழியாகவும் பரவியதற்கு ஏற்கனவெ அவர்கள் போட்டு வைத்திரூந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று சந்தேகிக்க இடமிருப்பதாகவும் ஃபார்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கை கூறுகிறது.

News source:Thejas Malayalam Daily