24/6/09

பைத்துல்லாஹ் மஹ்சூதின் எதிராளி சுடப்பட்டு மரணம்


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைத்துல்லாஹ் மஹ்சூதின் எதிராளி என்று கருதப்படும் போராளித்தலைவர் காரி ஜைனுத்தின் மர்மமனிதர்களால் சுடப்பட்டு இறந்துபோனார்.

தேரா இஸ்மாயீல் கான் நகரத்தில் மதீனா காலணியில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றது.அவருடன் இருந்த பாதுகாப்பாளருக்கும் காயம் ஏற்ப்பட்டது.

பைத்துல்லாஹ் மஹ்சூதிற்கு இந்தியாவோடும் அமெரிக்காவுடனும் தொடர்பிருப்பதாகவும் அவர் இஸ்லாத்திற்கும்,பாகிஸ்தானிற்கும் எதிராக செயல்படுவதாகவும் ஜைனுத்தீன் குற்றம்சாட்டியிருந்தார்.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்