24/6/09

ஃப்ளை துபாய்:இந்திய நகரங்களுக்கான விமான சேவை அறிவிப்பு


துபாய் அரசுக்கு சொந்தமான செலவு குறைந்த விமானக் கம்பெனியான ஃப்ளை துபாய் விமான சர்வீஸ் நிறுவனம் இந்திய நகரங்களுக்கான வழிகளை(ரூட்)அறிவித்துள்ளது.

துவக்கத்தில் கோயம்புத்தூர்,லக்னோ,சண்டிகார் ஆகிய நகரங்களுக்கு மட்டும் விமான சர்வீஸ் ஆரம்பமாகிறது.ஜூலை 14-இல் கோயம்புத்தூருக்கு முதல் விமானம் சேவையை துவக்கும்.வாரத்திற்கு 3 முறை கோயம்புத்தூருக்கு விமான சேவைகள் நடைபெறும்.

குறைந்தபட்ச விமானக்கட்டணம் 425 திர்ஹம்.லக்னோவிற்கு வாரத்தில் 4 விமான சேவைகள் நடைபெறும்.குறைந்தபட்ச விமானக்கட்டணம் 425 திர்ஹம்.ஜூலை 23க்கு ஆரம்பிக்கும் சண்டிகருக்கு குறைந்தபட்ச விமானக்கட்டணம் 350 திர்ஹம்.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்