27/6/09

சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் கூட்டாளி கைது!

புது டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் மிக நெருங்கிய நண்பர் சைலேந்திர சவுகான்(26) என்ற உதய் ப்ரதாப் சிங் என்பவரை, நேற்று டெல்லியிலுள்ள நந்த்நகாரியில் வைத்து டெல்லி காவல்துறை கைது செய்தது.

இவர் விஷ்வஹிந்து மகாசங்க் என்ற இயக்கத்தோடு தொடர்புடையவராவர். இவர் மீது கிறித்தவ ஆலயங்களின் மீதும் பாதிரியார்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.