8/7/09

சீனா: உரும்கியில் கலவர நிலை மோசம் அடைகிறது!

0 கருத்துகள்


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் நடைபெற்று வரும் கலவரம் மேலும் மோசம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஹான் சீன இனத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் தற்போது கலவரத்தில் குதித்துள்ளனர். உய்குர் இனத்தை அழித்து ஒழித்து விட்டுத் தான் ஓயப் போவதாக கோஷங்கள் எழுப்பிய வண்ணம் உய்குர் இன மக்களின் சொத்துகளை சூறையாடி வருகின்றனர்.
முன்னதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உய்குர் இன இளைஞர்களை காவல் துறை கைது செய்ததை எதிர்த்து உய்குர் இனப் பெண்களும் முதியவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹான் சீன மக்களில் பெருவாரியானோரும் கலவரத்தில் குதித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.
ஹான் சீன இன மக்கள் இரும்புத் தடி, மூங்கில் கழி, கடப்பாரை எனக் கையில் கிடைத்த ஆயுதங்களுடன், "உய்குர்களைத் தாக்கி ஒழிக்க வேண்டும்" என கோஷமிட்டுக் கொண்டே அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளைத் தாக்கி வருகிறார்கள்.
கலவரத் தடுப்புக் காவல்துறையினர், ஹான் சீன இன மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.