10/7/09

ஓரினச்சேர்க்கை:மத்திய அரசு அப்பீல் செய்ய மதத்தலைவர்கள் வலியுறுத்தல்

0 கருத்துகள்
புதுடெல்லி: ஓரினச்சேர்கையை சட்டப்பூர்வமாக்கி டெல்லி உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்யவேண்டும் என்று பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்கள்.

குடும்ப வாழ்வை தகர்க்கும் மேற்கத்திய கலாச்சார முறையினை இங்கு செயல் படுத்துவதற்கு செய்யும் முயற்சிகளுக்கெதிராக ஒருங்கிணைந்த பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீர் சய்யித் ஜலாலுதீன் உமரி,சங்கராச்சாரியா ஓம் காரன்ந்த்ஜி,டெல்லி ஆர்ச் டயோஸிஸ் இயக்குநர் ஃபாதர் ஃபெடரிக் இம்மானுவேல், டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி தலைவர் சர்தார் தரேசன் சிங்,ஆச்சாரியா லோகேஷ் முனிஜி ஆகியோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடுச்செய்திருந்தனர்."ஒரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கிய நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. இத்தீர்ப்பைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கைக்கு மாற்றமான இவ்வுறவு முறைக்கு ஊக்கமளிப்பதற்கு முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.கலாச்சார ரீதியாக பரிபூரணமான இந்நாட்டில் இத்தகைய அநாகரீகமான போக்குகளை அங்கீகரிக்க இயலாது.இதனை ஜனநாயக ரீதயான உரிமை என்று தவறாக விளங்கியுள்ளார்கள்.இயற்கைக்கு மாற்றமான எதுவும் மனிதனின் அடிப்படை உரிமைகளில் உட்பட்டது அல்ல. இதில் எந்தவொரு நியாயமும் கற்ப்பிக்க முடியாது.தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் சமூக கட்டுக்கோப்பை தகர்க்க முடியாது.இத்தகைய இயற்கைக்கு மாற்றமான உறவுமுறைகளை கவுன்சிலிங் மற்றும் சிகிட்சை மூலமாக மாற்றியெடுக்கவேண்டுமேத்தவிர அதனை அங்கீகரிப்பதல்ல". இவ்வாறு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திய மதத்தலைவர்கள் கூறினர்.

News Source: Thejas Malayalam Daily

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.