கர்நாடகா மாநிலம் குல்பர்காவிலிருந்து வெளி வரும் பத்திரிகை "சம்யுகத கர்நாடகா"என்ற தின இதழ். இதில் டெக்கானின் ஷேஹ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற முஸ்லிம் ஆன்மீக ஞானியைப்பற்றி மோசமான முறையில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பத்திரிகை அலுவலகத்திலிருந்த 3 ஊழியர்கள் காயமடைந்த்துள்ளனர். அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இதனைக்கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே வேளையில் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Labels
25/7/09
கர்நாடகா: முஸ்லிம் ஆன்மீக ஞானியைப்பற்றி மோசமான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்


இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.