9/7/09

டெல்லி இமாம் செய்யது அப்துல்லாஹ் புகாரி மரணமடைந்தார்

0 கருத்துகள்
டெல்லி இமாம் என்று அனைவராலும் அழைக்கப்படும் டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் முன்னாள் ஷாஹி இமாமான செய்யத் அப்துல்லாஹ் புகாரி அவர்கள் நேற்று டெல்லியிலுள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ மனையில் வைத்து மரணமடைந்தார்.(இன்னாலில்லாஹி...).87 வயதான புஹாரி அவர்கள் சோசியலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சார்ய கிருபாளினி ஆகியோருடன் இணைந்து 1975 இல் இந்திராகாந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தை எதிர்த்துப்போராடியவர்.இதனால் 1977 இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியத்தழுவியது. 1974இல் 350 வருட பழக்கமுள்ள டெல்லி ஜும்மா மஸ்ஜிதை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து போராடியதால் சிறைபிடிக்கப்பட்டார்.முஸ்லிம்களின் அரசியல் சமூக சக்திப்படுத்தலுக்காக தொடர்ந்துக்குரல்க்கொடுத்தவர் புஹாரி அவர்கள்.1973 இல் இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி துர்க்மான் கேட் பகுதியை அக்கிரமமாக தகர்த்தபொழுதும், முஸ்லிம்களை வலுக்கட்டயாமாக குடும்பக்கட்டுப்பாடு செய்யவைத்ததையும் வலுமையாக எதிர்த்தார் புஹாரி.அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து சுவனத்தை வழங்குவானாக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.