9/7/09

டாக்டர் மர்வா படுகொலையை கன்டித்து கெய்ரோவில் ஆர்ப்பாட்டம், ஜெர்மனி வருத்தம்!

0 கருத்துகள்

கடந்த ஜூலை 5 ஆம் தேதி எகிப்திய டாக்டர் . மர்வா செர்பினி(32) ஹிஜாப் அணிந்ததற்காக ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்திலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து எகிப்திய மக்கள் கெய்ரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ஜெர்மனி இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்க்கெல் எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக்கைச் சந்தித்து இச்சம்பவம் குறித்த ஜெர்மனி தரப்பு விளக்கம் அளிப்பார் என ஜெர்மன் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
"இது போன்ற ஒரு மதத்துக்கு எதிரான கடுமையான வெறுப்பு உமிழ்தலை ஜெர்மனி ஏற்றுக் கொள்ளவில்லை; மர்வா என்ற முஸ்லிம் பெண்ணைக் கொன்ற அக்சன் என்ற ரஷ்ய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படுவார்" என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அரபு லீக் பொதுச்செயலர் அமர் மூசா, "இது மனித இனத்துக்கு எதிரான வன்கொடுமை; இதை அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.