4/8/09

சீனா:உரூம்கியில் மேலும் 319 உய்கூர் முஸ்லிம்கள் கைது

0 கருத்துகள்
உரூம்கி:ஜூலை 5 ஆம்தேதி ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாக மேலும் 319 உய்கூர் முஸ்லிம்களை சீன அரசு கைதுச்செய்துள்ளது.
இதோடு கலவரம் சம்பந்தமாக கைதுச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1572 ஆகியுள்ளது. ஹான் இனத்தவர்களும் சீன போலீசும் ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் உய்கூர் முஸ்லிம்கள் மீது நடத்திய அக்கிரமத்தாக்குதலில் 197 உய்கூர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
கலவரம் நடந்த அன்றைய இரவு 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்களை காணவில்லை. சிவிலியன்களுக்கிடையிலுள்ள சீன உளவாளிகள்தான் முஸ்லிம்களைப்பற்றிய விபரங்களை சீன காவல்துறைக்கு அளிக்கின்றனர். சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரும் கைதுச்செய்யப்படுவர் என்றும், ரகசியச்செயல்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவர கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீன பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.