5/8/09

குவாண்டனாமோ சிறைக்கைதிகளில் சிலரை அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சி

0 கருத்துகள்
வாஷிங்டன்: குவாண்டனாமோ சிறைக்கைதிகளில் சிலரை அமெரிக்காவுக்கு மாற்றுவதை குறித்து ஒபாமா அரசு ஆலோசித்துவருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆபத்தானவர்கள் என்று கருதப்படுகிறவர் களையும்,பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களையும் தனியாக உருவாக்கப்பட்ட சிறைகளில் அடைப்பதற்கு அமெரிக்கா ஆலோசித்துவருகிறது. வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைதான் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதி தீவிர பாதுகாப்புடன் கூடியதாகவும், விசாரணக்கான சிறப்பு நீதிமன்ற அறைகளை உள்ளடக்கியதாகவும் இச்சிறைச்சாலை இயங்கும். ஃபோர்ட் ஸ்டீவன்வர்த்தில் ராணுவசிறையும், ஸ்டான்டீஷிலுள்ள அதிதீவிர பாதுகாப்பு சிறையும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
பாதுகாப்புதுறை, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புதுறை ஆகியன இணைந்து இச்சிறைச்சாலையை நடத்தப்போவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.