4/8/09

பாகிஸ்தானின் ஸ்வாத் வேலி பகுதியில் பள்ளி சிறுவர்களின் தற்போதைய நிலை

0 கருத்துகள்

பாகிஸ்தானின் அழகிய பிரதேசம் மற்றும் குட்டி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்பட்ட அழகிய பகுதி ஸ்வாத் வேலி.இப்பகுதியில் 1700 க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.மில்லியனுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வி அறிவை அடைந்து வருகின்றனர்.
கடந்த
4 மாதமாக அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டு படைகள் தாலிபான் வீரர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக தற்போது இந்த சிறுவர்களின் கல்வி நிலையோ மிகவும் மோசமானது.

பாகிஸ்தானின் ஸ்வாத் வேலி பகுதியில் பள்ளி சிறுவர்களின் தற்போதைய நிலை:

மிங்கோரா ; ஷஹாரா கல்லூரியின் முதல்வர் ஹஸ்ரத் ஹுசைன் சாக்கி இஸ்லாமிக் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில்;

200 க்கு மேற்பட்ட பள்ளி கூடங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டதாகவும்,318 க்கு மேற்பட்ட பள்ளி கூடங்கள் பெரும் பகுதி சேதம் அடைந்தது.இதில் தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கென்று உருவாக்கப்பட்ட பள்ளிகள் அதிகம்.

பல பள்ளி கூடங்கள் செயல்பட்டாலும் அவர்களுக்கு அன்றாட தேவையான பாட புத்தகங்கள்,எழூதுகோல்,எழுதும் பலகை போன்றவை இல்லாத நிலை.பள்ளி கூடங்களின் வகுப்பறைகளில் 35 முதல் 45% மணவர்களே உள்ளனர்.

மாணவர்களை தொடர்பு கொள்ள தொலைதொடர்பு வசதி இல்லை. பல நகரங்களில் மாணவர்கள் நடந்து வரும் வழி இன்னும் சரிபடுத்தப்படவில்லை.2 முதல் 3 கி.மி தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு வாக வசதி இல்லை.

பாகிஸ்தான் அரசால் பள்ளி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று பாகிஸ்தான் அரசால் இதுவரை கல்வி நிறுவனங்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்து தரப்படவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களில் போதிய பண வசதி இல்லை.மிலிட்டரி தாக்குதலினால் அங்கு வாழும் தொழில் அதிபர்களிடம் கூட பணம் இல்லாத நிலை.ஒட்டு மொத்த மக்களின் நிலையும் இவ்வாறே உள்ளது.எங்களிடம் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் அவர்களுக்கு கொடுக்க முடியாத நிலை.இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 110 கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் இவ்வாறு அவர் தன் பேட்டியில் தெரிவித்தார்.

News Source : Islamic online

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.