சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் மரணமடைந்தார். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.
தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.
பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கச்சி சுவாமிநாதன் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டுவரும் மாற்றாருக்கு இஸ்லாத்தை எடுத்து இயம்பும் நிகழ்ச்சியான ஈத்மிலன் என்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூறுகிறோம்.
எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கச்சி சுவாமிநாதன் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டுவரும் மாற்றாருக்கு இஸ்லாத்தை எடுத்து இயம்பும் நிகழ்ச்சியான ஈத்மிலன் என்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூறுகிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.