21/6/09

தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்த முடியாது : மோடி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக குஜராத் மாநில அரசு குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் சட்ட முன்வரைவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் மூன்று இடங்களில் திருத்தம் செய்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தைப் பரிந்துரைப்பது என்று நேற்று கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்து குஜராத் அரசுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இச்சட்ட முன்வரைவில் எத்தகைய மாற்றமும் செய்ய இயலாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில் கூடியுள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி வந்த மோடி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இந்த சட்டமுன்வரைவில் மத்திய அரசு கூறியுள்ள மாற்றங்களைச் செய்தால் அந்தச் சட்டம் பல் மற்றும் நகம் இல்லாதது போன்று இருக்கும் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள் : குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு மசோதாவை