Labels
31/7/09
குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சர்ச்சைக்குரிய தீவிரவாத தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்
30/7/09
போரினால் நிர்மூலமாக்கப்பட்ட காஸ்ஸாவில் நிவாரண உதவிகளுடன் ஈரான் அமைப்பு
பத்தாயிரம் உய்கூர் முஸ்லிம்கள் ஒரே இரவில் காணாமல் போனதாக ராபிஆ கதீர் குற்றச்சாற்று.
29/7/09
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் கட்சி பிரகடனம்
இஸ்ரேலிய சிறையில் மிக மோசமாக நடத்தப்படும் ஃபலஸ்தீனர்கள்
உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயுற்றால் கூட சிகிட்சை அளிக்க இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டால் கூட அங்குள்ள மருத்துவர்கள் எந்த நோயும் இல்லை என்று பொய் சான்றிதழ் அளித்து மீண்டும் நோயுற்றவரை சிறைக்கே அனுப்புகின்றனர். ஃபலஸ்தீனிய சிறைக்கைதிகள் சங்கம் என்ற அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் இந்த சிறைக்கைதிகளை சந்தித்தபோது பலரும் தாங்கள் இஸ்ரேலிய சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினர். பி.பி.எஸ் இன் அட்டர்னி கூறும் அறிக்கையில் மன்சூர் என்ற ஃபலஸ்தீனிய கைதி ஒருவர் சமீபத்தில் காலைநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டபொழுது நிலைகுலைந்து விழுந்துவிட்டார். உடனே சிறை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவரை பரிசோதித்த இஸ்ரேலிய டாக்டர் மன்சூர் நலமாக இருப்பதாக பொய் சான்றிதழ் அளித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக சிறையிலிருக்கும் மன்சூருக்கு ஒரு காது கேட்காது. மேலும் இஸோம்னியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல் ஒவ்வாமை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உடனடியாக மருத்துவ நிபுணரிடம் சிகிட்சை அளிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பி.பி.எஸ் அட்டர்னி மேலும் கூறுகையில் 27 ஃபலஸ்தீன கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. ரெட்கிராஸ் இந்த கைதிகளின் பிரச்சனைகளைப்பற்றி கூறும்பொழுது அவ்வமைப்பு இதனை அலட்சியப்படுத்தியது. மேலும் சிறை அதிகாரிகள் தங்கள் செல்வாக்கை உபயோகித்து சிறைக்கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிப்புச்செய்கின்றனர். சிறை
இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் அநியாயமான முறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தடுப்பு சட்டம்-ஜனாதிபதி யோசனையை நிராகரித்த மோடி
இந்த புதிய சட்ட மசோதாவில் திட்டமிட்ட குற்றம் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் தீவிரவாதம் என்ற வார்த்தையும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை முன்பு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது குஜராத் அரசு. ஆனால் அதில் மத்திய அரசின் ஆலோசனைப்படி 3 திருத்தங்களை கூறியிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இருப்பினும் அதை ஏற்க மறுத்த குஜராத் அரசு அதே சட்ட மசோதாவை மீண்டும் இன்று நிறைவேற்றியுள்ளது.
மேலும், இந்த சட்டத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்த்ததற்குக் காரணம், குஜராத்தில் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் என்று தனியாக ஏதும் இல்லாததே என்று குஜராத் அரசு கூறுகிறது.
முதலில் இந்த சட்ட மசோதாவை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடா) நாடு முழுவதும் அமலில் இருந்தது. எனவே அப்போது குஜராத் சட்ட மசோதாவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி இந்த சட்டத்தை குஜராத் அரசு இயற்றியது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து மீண்டும் இந்த சட்ட மசோதாவை குஜராத் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் 2வது முறையும் இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை கூறியதால் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
3 திருத்தங்களை மேற்கொண்டால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொளஅவதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த மசோதாவில், ஒரு போலீஸ் அதிகாகரி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் செல்லும் என்ற அம்சத்தை ஏற்கவே முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மேலும், அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ற அம்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் சிதம்பரம் கூறியிருந்தார். இதேபோல இன்னொரு திருத்தத்தையும் மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் இவை எதையும் செய்யாமலேயே அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளது குஜராத் அரசு.
28/7/09
இஸ்ரேலில் அமெரிக்காவுக்கு எதிரான பேரணியில் ஒபாமா இனவெறியன் என்ற கோஷம்
செக்ஸ் புகார்-உமர் அப்துல்லா ராஜினாமா
2006ம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் அவர்களை போலீஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.
இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சி துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் பேசுகையில், இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இவரது பேச்சால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.
நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு தனது இருக்கையை விட்டு எழுந்தார்.
அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை அவையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். அவரை பிடித்து இழுத்து நாற்காலியில் அமர வைக்க முயன்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் அவரை சூழ்ந்து கொண்டு இழுத்து நாற்காலியில் உட்கார வைத்தனர்.
ஆனால் அதையும் மீறி எழுந்த அவர், இந்தப் பிரச்சனையில் என்னை செயல்பட அனுமதியுங்கள், எனக்கு இந்தப் பதவி வேண்டாம், முதலில் என்னை வெளியே போக அனுமதியுங்கள் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
ஆனால், நீங்கள் ராஜினாமா செய்தாலும் அதை கட்சி ஏற்காது, நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி அமைச்சர்கள் அவரை வெளியேற விடாமல் தடுத்தனர்.
ஆனாலும் அவர்களையும் மீறி வெளியே சென்ற உமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் தந்தார்.
இதையடுத்து ராஜினாமாவை வோரா ஏற்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. உமர் மீதான புகார் குறித்து விசாரணைக்குப் பின் ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.
உமர் தனது ராஜினாமா முடிவில் தீவிரமாக இருந்தால் அவருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் சிறப்பாக நடைபெற்ற மனித உரிமை கருத்தரங்கம் மற்றும் 'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' நூல் வெளியீட்டு விழா
கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து, மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி. இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி (சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கோவை ஜே.எம்.௭ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் மேற்படி ஏ.சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் இறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டனர்.
'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவேற்ப்புரை நிகழ்த்தினர். புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.Oதமிழ்நாடு) கருத்துரையாற்றினார். இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர்
அப்துல் நாசர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களிடம் ஒப்படைத்தார்.இதனை தொடா்ந்து ஏ.சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஏ.சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி தமிழக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா.அ மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.
தேசிய அளவிலான பெண்கள் அமைப்பு உருவாக்கம்
சர்வதேச திரைப்படவிழா இணையதளத்தின் தகவலை துண்டித்த (hack) சீனா
சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்
தலிபான் இயக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல்: அல்ஜஸீரா தகவல்
தலிபான் இயக்கத்தலைவர் முல்லா உமர் அவர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அவ்வியக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல் தங்களுக்கு கிடைத்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
27/7/09
இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!
பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு வாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.
இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.
சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.
பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.
அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.
பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
source :satyamargam
ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்த பிரிட்டீஷ் எம்.பிக்கள் கோரிக்கை
இஸ்ரேலிய சியோனிஷ ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக தற்காப்பு போராட்டத்தை நடத்தி வரும் ஃபலஸ்தீனின் முக்கிய அமைப்பான ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பிரிட்டீஷ் எம்.பிக்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஹமாஸை புறந்தள்ளிவிட்டு சமாதான நடவடிக்கைகளுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அனைத்துகட்சி எம்.பிக்கள் அடங்கிய வெளிநாட்டு விவகாரக்குழு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. அனைத்து கட்சிகளைச்சார்ந்த எம்.பிக்கள் அடங்கிய குழு இரண்டு வருடத்திற்கு முன்பும் இதுப்போன்றதொரு அறிக்கையை அரசுக்கு அளித்திருந்தது. லெபனானில் தற்காப்புப்போராட்டத்தை நடத்தி வரும் ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கார்டன் பிரவுன் அரசு ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
பேச்சு வார்த்தைகளில் ஹமாஸையும் உட்படுத்தவேண்டாம் என்ற மத்தியகிழக்கு நான்கு பேர் குழுவின்(Middleeast quartet) கொள்கையால் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் தங்களுடைய கருத்து என்று எம்.பிக்கள் குழு கூறியுள்ளது.
ஹமாஸின் ஒத்துழைப்பு இல்லாமல் நிலையான அமைதிக்கு சாத்தியமில்லை. காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் முடிந்து 6 மாதமாகியும் இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. கலவரத்தை உருவாக்கும் வாய்ப்புகள் தற்ப்பொழுதும் உள்ளன.இத்தகைய சூழலில் மீண்டு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஹமாஸின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளிலும் நான்கு பேர்க்குழு (quartet) தோல்வியையே தழுவியுள்ளது.இவ்வாறு அக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Middleeast quartet என்பது அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா, யூரோப்பியன் யூனியன் ஆகியன அடங்கிய குழு. இதில் ரஷ்யா மட்டும்தான் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ராணுவத்தில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு தடையில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்
மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்- வகேலா
thatstamil
இஸ்தான்புல்:சீனாவைக்கண்டித்து உய்கூர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
26/7/09
இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்க்க எங்களால் இயலும்: ஈரான்
ஈரானின் அணு நிலையங்களை தகர்ப்பதற்கு இஸ்ரேலி துணிந்தால் அதற்கு சரியான பதிலடிக்கொடுக்க எங்களுக்கு பலம் உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக இந்த லட்சியத்தை முன்னிறுத்தி ஈரான் முயற்சிகளை எடுத்து வருகிறது. இஸ்ரேலின் அணுநிலையங்கள் அனைத்தையும் அழிக்க தொலைதூர ஏவுகணைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். என்று ஜஹ்பரி கூறியுள்ளார்.
ஈரானின் அணுக்கொள்கை மிகப்பெரிய மிரட்டல் என்றும் அதனை தடுக்க ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட எதனையும் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இந்நிலையில்தான் ஈரானின் அரசு புரட்சிப்படையின் வீர முழக்கம் இவ்வாறு வெளிப்பட்டது. இதனை இஸ்ரேலின் ஹாரட்ஸ் இணையதள இதழ் "சியோனிஷ அரசின் எந்த தாக்குதல்களையும் வினாடிகளுக்குள் பதிலடிக்கொடுக்கத்தான் இந்த தயாரிப்புகள். ஈரானை தாக்குதவதற்கு தயாரானால் இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பது உறுதி"என்று ஜஹ்பரி கூறியதாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.
தேஜஸ் மலையாள நாளிதழ்
விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு ஆலோசனை
முஸ்லிம்கள் தாடி வளர்ப்பது தாலிபானிசம் என்று விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கட்ஜு மன்னிப்புகேட்டார்.
இச்சம்பவத்தை
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
25/7/09
கர்நாடகா: முஸ்லிம் ஆன்மீக ஞானியைப்பற்றி மோசமான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்
கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஃப்ரீடம் பரேடிற்கும், டி.ஒய்.எஃப்.ஐ யின் மார்ச் ஃபாஸ்ட்டுக்கும் கண்ணூரில் தடை
மைசூர் மதக் கலவரம்-ராம்சேனா தலைவர் முத்தாலிக் கைது
மங்களூரில் ஒரு பப்க்குள் நுழைந்து பெண்களை ரோட்டில் ஓட ஓட விரட்டித் தாக்கிய அமைப்பு தான் ஸ்ரீராம் சேனா.
இந் நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் மைசூரில் இரு பிரினருக்கு இடையே மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதக் கலவரத்தை தூண்டியதே முத்தாலிக் தான் என்றும், பிரச்சனையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதால் தான் மதக் கலவரமே வெடித்தது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலை பெல்காம் நகரில் வைத்து அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
பப் தாக்குதலையடுத்த முத்தாலிக் மங்களூருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
source:Thatstamil
ஆஃப்கான் போருக்கு பிரிட்டன் பொதுமக்கள் எதிர்ப்பு:கருத்துக்கணிப்பில் தகவல்
கடந்
அமெரிக்காவைச்சார்
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப்படையினர் ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை 186 பிரிட்டீஷ் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தா
Source:Press Tv
ஈரானில் மீண்டும் விமான விபத்து : 17 பேர் பலி!
டெஹ்ரானிலிருந்து 600 மைல் தொலைவில் உள்ள மாஷாத் நகருக்கு 153 பேருடன் சென்ற (AIRIA AIR)
விமானம் மாஷாத் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது மாற்று ஓடுபாதையில் இறங்கியது. குறைந்த தூரமே உடைய இந்த பாதையில் வேகமாகச் சென்ற இந்த விமானம் வேகத்தைக் குறைத்து நிற்க முடியாமல் சுற்றுச் சுவரில் மோதியது. வேகமாக வந்து மோதியதால் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்தது.
இதில் விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஈரானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 168 பேரும் பலியானார்கள். இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குள் மற்றொரு விமான விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
source: Dawn,presstv
பி.ஜே.பி 199o -->1993 !-->2004 !!-->2009 !!!-->2012!!!!! கார்ட்டூன்
குஜராத் இனப்படுகொலை:மோடியை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு
மோடியை சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி) விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உயிருடன் வைத்துக் கொளுத்தப்பட்டார். இதுதொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்று அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு்ந்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்றம், இதுகுறித்து எஸ்.ஐ.டி. விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காலு மலிவாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி மனு செய்திருந்தார்.
தனது மனுவில், உச்சநீதிமன்றம் பொதுவான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. மோடியை விசாரிக்க வேண்டும் என அது குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும், எஸ்.ஐ.டிக்கு முதல்வர் மோடியை விசாரிக்கவோ அல்லது விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பவோ அதிகாரம் இல்லை என்று கோரியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மோடியை விசாரிக்க எஸ்.ஐ.டிக்குத் தடை இல்லை என்று அது உத்தரவிட்டுள்ளது.
24/7/09
அப்துல் கலாமைசோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை -அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு
பேராசிரியர் சபர்வால் படுகொலையின் முக்கிய சாட்சி படுகொலை
பாகிஸ்தான் ஆதாரங்களை ஒப்படைத்ததா? இந்தியா மறுப்பு
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : வயலார் ரவி
பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை
23/7/09
பாகிஸ்தானில் நடந்த தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு:ஆதாரங்களை இந்தியாவிடம் ஒப்படைத்ததாக பாக்.பத்திரிகை டான் தகவல்
சுதந்திர இந்தியாவில் மறைமுக சித்திரவதை சிறைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அசாவுத்தீன் உவைசி
கடந்தவாரம் மீடியாக்கள் மூலம் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்திய மறைமுக சித்ரவதை சிறைச்சாலைகளைப் பற்றியும் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுவது பற்றியும் மக்களவையில் கேள்வி எழுப்பாததைப்பற்றி அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி யுமான அசாவுத்தீன் உவைசி யிடம் கேட்கையில்; தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து ஆதிக்க அமெரிக்காவில் இருக்கும் குவான்டனமோ மறைமுக சிரைச்சாலையில் நடக்கும் சித்ரவதையைப் போன்று சுதந்திர இந்தியாவில் நடக்கும் இந்த மாபாதக செயலை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அது மட்டும் இல்லாமல் அது போன்ற சிறைச்சாலைகளை மூடும்படி இந்திய அரசை வற்புறுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹைதராபாதில் அப்பாவி நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவது பற்றி கேட்டதற்கு, ஆம் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போன்ற தொடரும் கொடுமைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் வலியுறுத்துவேன் என பதில் அளித்தார்.
source: Twocircles
லிபரான் விசாரணை அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர்
1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரிக்கை அமைக்கப்பட்ட லிபரன் விசாரணைக் குழு அண்மையில் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிதம்பரம், தான் இந்த அறிக்கையின் நான்கு தொகுதிகளைப் படித்துவிட்டதாகவும், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய சட்டம் அனுமதித்துள்ள ஆறு மாதத்திற்குள் இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த அறிக்கையின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.